×

சிவக்குமார சுவாமிகள் மறைவு தாளவாடியில் 300 கடைகள் அடைப்பு

சத்தியமங்கலம், ஜன.24: லிங்காயத்து சமுதாயத்தின் தலைமைக் குரு சிவக்குமார சுவாமிகள், காலமானதை தொடர்ந்து தாளவாடி மலைப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.ர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத்து சமுதாயத்தின் கிட்டகங்கா மடாதிபதியின் தலைமைக்குரு சிவக்குமார சுவாமிகள். 110 வயதான இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் காலமானார். அவரது மறைவுக்காக கர்நாடக மாநில அரசு நேற்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவித்தது. அதன்படி கர்நாடக மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் பஸ் நிலையம், தொட்டகாஜனூர் ரோடு, தலமலை ரோடு, ஓசூர் ரோடு, மைசூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. தாளவாடி மலைப்பகுதியில் அதிகளவில் லிங்காயத் சமுதாய மக்கள் வசிப்பதால் அங்கு முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டன.

Tags : block ,shops ,
× RELATED நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ்...